என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் மழை
நெல்லை:
நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றும், இன்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பெரும்பாலன இடங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுண் பகுதிகளில் சிறிது நேரம் கனமழை பெய்தது.
ஆய்க்குடியில் நீண்ட நேரம் கனமழை கொட்டியது. இங்கு 88.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சங்கரன்கோவில், தென்காசி, அம்பை பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 105 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 106.15 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 118 அடியாக இருந்தது. இன்று அதுவும் ஒரு அடி உயர்ந்து 119.13 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 43 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று 43.75 அடியாக உள்ளது.
சிறிய அணையான கருப்பாநதி அணைக்கு மழை காரணமாக அதிக தண்ணீர் வந்தது. ஏற்கனவே தென்மேற்கு பருவமழை காரணமாக அணையில் பெரும்பகுதி நீர்நிரம்பி இருந்ததால், நேற்று ஒரே நாள் பெய்த மழையில் மீண்டும் கருப்பாநதி அணை நிரம்பி வழிந்தது. இதுபோல செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையும் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நிரம்பி வழிந்து வருகிறது. கடனாநதி, ராமநதி, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் நேற்று மெயினருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை குறைந்ததால் அருவிகளில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கும் இன்று குறைந்தது. இதனால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் இன்று காலைவரை பெய்த மழை அளவு மில்லிமீட்டர் வருமாறு:-
ஆய்க்குடி - 88.4
தென்காசி - 45.2
அம்பை - 11.6
மணிமுத்தாறு - 9.4
பாளை - 8.6
சேரன்மகாதேவி - 6.6
நெல்லை - 6
தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர், கழுகுமலை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டர் வருமாறு:-
தூத்துக்குடி - 22.7
கோவில்பட்டி - 2.1
சாத்தான்குளம் - 1.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்