search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்கள் ரத்து
    X
    மின்சார ரெயில்கள் ரத்து

    பராமரிப்பு பணி: மின்சார ரெயில்கள் ரத்து

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை கடற்கரை- அரக்கோணம்- கடற்கரை இடையே காலை 9.20 மணிக்கு இயக்கப்படும் சுற்றுவட்ட பாதை ரெயில் கூடுவாஞ்சேரி- அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 10.08, 11.48 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே காலை 10.30 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    * செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.55, மதியம் 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலும், காலை 11.30, மதியம் 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு- கூடுவாஞ்சேரி இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×