என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளகிரி அருகே ரசாயன கழிவுகளை ஏரி-குளத்தில் கொட்டியதால் தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை
Byமாலை மலர்15 Oct 2019 10:51 AM GMT (Updated: 15 Oct 2019 10:51 AM GMT)
சூளகிரி அருகே ரசாயன கழிவுகளை ஏரி-குளத்தில் கொட்டிய தனியார் கெமிக்கல் நிறுவனத்தையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள உத்தன பள்ளி அகரம் கிராமத்தில் தனியார் கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளை லாரியில் ஏற்றி அந்த பகுதி ஏரி-குளத்தில் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் அகரம், பீர்ஜேபள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை ஏரியில் கொட்டவந்த லாரியையும், தனியார் கெமிக்கல் நிறுவனத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த உத்தனபள்ளி போலீஸ் மற்றும் தாசில்தார், ஆர்.ஐ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள உத்தன பள்ளி அகரம் கிராமத்தில் தனியார் கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளை லாரியில் ஏற்றி அந்த பகுதி ஏரி-குளத்தில் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் அகரம், பீர்ஜேபள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை ஏரியில் கொட்டவந்த லாரியையும், தனியார் கெமிக்கல் நிறுவனத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த உத்தனபள்ளி போலீஸ் மற்றும் தாசில்தார், ஆர்.ஐ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X