என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்ககோரி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அருகே ஓபசமுத்திரம் கிராமம் உள்ளது. இங்கு 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இவர்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓபசமுத்திரம் ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுலகத்தில் பொதுமக்கள பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் குடி தண்ணீர் வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் இன்று காலை கள்ளூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கிச் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சப்- இன்ஸ் பெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி இன்று மாலைக்குள் குடி தண்ணீர் சப்ளை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்