என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் அடுத்த அரமங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேதரத்தினம் (வயது 48). மீனவர்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மீனவர்களுடன் வேதரத்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
அப்போது அங்குள்ள அலையாத்தி காடுகள் நிறைந்தலகூன் அருகே உள்ள கடல் முகத்துவாரம் பகுதியில் வேதரத்தினம் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென எதிர்பாராத விதமாக கடல்நீர் மற்றும் சேற்றில் தவறி விழுந்தார்.
இதுகுறித்து மீனவர்கள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படகு மூலம் வேதரத்தினம் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடலில் விழுந்து பலியான வேதரத்தினத்துக்கு ஆயியம்மாள் (40) என்ற மனைவியும் லோகித்வரன் (8), அஜய்(6), அஸ்வந்த்(4) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்