என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் உள்பட 36 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி
Byமாலை மலர்14 Oct 2019 5:59 AM GMT (Updated: 14 Oct 2019 5:59 AM GMT)
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உட்பட 36 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை:
கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருகின்றனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் காய்ச்சலுடன் வருபவர்களை பரிசோதனை செய்து ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது. அதில் தட்டணுக்கள் குறைபாடு உள்ளவர்களை டெங்கு காய்ச்சல் அறிகுறியின் பேரில் டெங்கு காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரம் செயல்பட கூடிய தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு கொசு வலைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் வரும் நோயாளிகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உட்பட 36 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலுக்கு 128 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருகின்றனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் காய்ச்சலுடன் வருபவர்களை பரிசோதனை செய்து ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது. அதில் தட்டணுக்கள் குறைபாடு உள்ளவர்களை டெங்கு காய்ச்சல் அறிகுறியின் பேரில் டெங்கு காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரம் செயல்பட கூடிய தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு கொசு வலைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் வரும் நோயாளிகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உட்பட 36 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலுக்கு 128 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X