என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
கோவை:
கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், தனியாருக்கு குடிநீர் வழங்குவதை கண்டித்தும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த மாதம் 27-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொழில் அதிபர்கள், வணிகர்கள், வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர். இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்காக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தி.மு.க. எம்.எல்.ஏ, நா. கார்த்திக் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தார்.
போலீசார் இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தாலும், கோர்ட்டில் இந்த வழக்கு வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தாலும் மேலும் ஐகோர்ட்டு என்ன காரணத்துக்காக தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளதோ, மீண்டும் அதே காரணத்துக்காக வேண்டி மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த கோரியுள்ளதால் மேற்படி இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாநகர போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., ஆதிதமிழர் பேரவையினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் வந்தனர். அவர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கையில் கொடியுடன் கோஷம் போட்டப்படி வந்தனர்.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்