என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் மெட்ரோ நடை மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு
Byமாலை மலர்8 Oct 2019 4:39 AM GMT (Updated: 8 Oct 2019 4:39 AM GMT)
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் ஜி.எஸ்.டி. சாலையை கடக்க வசதியாக கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம் அடுத்த திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் 4 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சாலையை கடக்க பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.
பயணிகள் எளிதில் மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்வதற்கு வசதியாக ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே மெட்ரோ நடை மேம்பாலம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.
கடந்த ஆண்டு மே மாதம் நடை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. இந்த மாதம் இறுதியில் கட்டுமான பணிகள் நிறைவடைகிறது. தற்போது நடைமேம்பால இறுதி பணிகள் நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் (நவம்பர்) நடை மேம்பாலம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக மிகப்பெரிய நடை மேம்பாலமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் ஜி.எஸ்.டி. சாலையை கடக்க பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். பயணிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அங்கு மிகப்பெரிய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நடை மேம்பாலம் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்த மாதம் (நவம்பர்) நடை மேம்பாலம் பயணிகள் வசதிக்காக திறந்து வைக்கப்படும். இதன் மூலம் பயணிகள், பொதுமக்கள் ஜி.எஸ்.டி. சாலையை எளிதில் கடந்து செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் 4 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சாலையை கடக்க பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.
பயணிகள் எளிதில் மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்வதற்கு வசதியாக ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே மெட்ரோ நடை மேம்பாலம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.
கடந்த ஆண்டு மே மாதம் நடை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. இந்த மாதம் இறுதியில் கட்டுமான பணிகள் நிறைவடைகிறது. தற்போது நடைமேம்பால இறுதி பணிகள் நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் (நவம்பர்) நடை மேம்பாலம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக மிகப்பெரிய நடை மேம்பாலமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் ஜி.எஸ்.டி. சாலையை கடக்க பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். பயணிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அங்கு மிகப்பெரிய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நடை மேம்பாலம் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்த மாதம் (நவம்பர்) நடை மேம்பாலம் பயணிகள் வசதிக்காக திறந்து வைக்கப்படும். இதன் மூலம் பயணிகள், பொதுமக்கள் ஜி.எஸ்.டி. சாலையை எளிதில் கடந்து செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X