search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    விக்கிரவாண்டி தொகுதியில் கனிமொழி எம்.பி. இன்று மாலை தேர்தல் பிரசாரம்

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. இன்று மாலை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. நேரடியாக மோதுவதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

    தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். கனிமொழி எம்.பி. இன்று மாலை 4.30 மணிக்கு மூங்கில்பட்டு கிராமத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மதுரப்பாக்கத்திலும், 5.30 மணிக்கு ராதாபுரத்திலும், 6.30 மணிக்கு தொரவியிலும், 7 மணிக்கு பனையபுரத்திலும், 7.30 மணிக்கு முண்டியம்பாக்கத்திலும் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு விக்கிரவாண்டி ஏ.ஆர்.எஸ்.எம். திருமண மண்டபத்தில் மகளிரணி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறார்.

    மாலை 4.30 மணிக்கு விராட்டிக்குப்பம் கே.வி.ஆர். நகர் பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 5 மணிக்கு திருவாமாத்தூரிலும், 5.30 மணிக்கு தென்னமாதேவியிலும், 6 மணிக்கு தும்பூரிலும், 6.30 மணிக்கு ஒரத்தூரிலும், 7 மணிக்கு சிந்தாமணி யிலும், 7.30 மணிக்கு விக்கிரவாண்டியிலும் பிரசாரம் செய்கிறார்.

    விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் போட்டியிடுகிறார். அந்த வேட்பாளரை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் அருகே இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.
    Next Story
    ×