search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டக்டர் ராஜூ
    X
    கண்டக்டர் ராஜூ

    கும்பகோணத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- அரசு பஸ் கண்டக்டருக்கு ‘பளார்’

    சென்னையில் இருந்து அரசு பஸ்சில் வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண், கண்டக்டர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. வயது (28) இவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக உள்ளார். இவர் நேற்று இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து கும்பகோணம் வழியாக மன்னார்குடி செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி தன்னை யாரோ தொடுவது போல் உணர்ந்து திடீரென கண் விழித்தார்.

    அப்போது கண்டக்டர் ராஜூ பின் இருக்கையில் இருந்து தமிழ்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கண்டக்டரின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து கும்பகோணம் பஸ் நிலையத்தில் இறங்கிய தமிழ்ச்செல்வி கண்டக்டர் ராஜுவிடம் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து வாக்குவாதம் செய்தார். ஆனால் ராஜு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொடுத்துக் கொள் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து ஆவேசம் அடைந்த தமிழ்ச்செல்வி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கண்டக்டர் ராஜு மீது மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து மேற்கு போலீசார் விரைந்து வந்து கண்டக்டர் ராஜூவிடம் விசாரணை நடத்த அழைத்து சென்றனர்.

    ஓடும் பஸ்சில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×