என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- அரசு பஸ் கண்டக்டருக்கு ‘பளார்’
கும்பகோணம்:
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. வயது (28) இவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக உள்ளார். இவர் நேற்று இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து கும்பகோணம் வழியாக மன்னார்குடி செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவில் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி தன்னை யாரோ தொடுவது போல் உணர்ந்து திடீரென கண் விழித்தார்.
அப்போது கண்டக்டர் ராஜூ பின் இருக்கையில் இருந்து தமிழ்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கண்டக்டரின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.
இதையடுத்து கும்பகோணம் பஸ் நிலையத்தில் இறங்கிய தமிழ்ச்செல்வி கண்டக்டர் ராஜுவிடம் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து வாக்குவாதம் செய்தார். ஆனால் ராஜு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொடுத்துக் கொள் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆவேசம் அடைந்த தமிழ்ச்செல்வி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கண்டக்டர் ராஜு மீது மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து மேற்கு போலீசார் விரைந்து வந்து கண்டக்டர் ராஜூவிடம் விசாரணை நடத்த அழைத்து சென்றனர்.
ஓடும் பஸ்சில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்