search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    கடந்த மாதம் மெட்ரோ ரெயிலில் 32 லட்சம் பயணிகள் பயணம்

    மெட்ரோ ரெயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 31 லட்சத்து 89 ஆயிரத்து 591 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடங்கியது முதல் சென்னை மக்களுக்கு பல்வேறு வசதிகளுடன் பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 31 லட்சத்து 89 ஆயிரத்து 591 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகள் குறுகிய நேரத்தில் தங்களது சேருமிடத்தை சென்று சேர்ந்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

    கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 21 நாட்கள் தலா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். மேலும் 2-ந்தேதி 1,14,240 பயணிகளும், 6-ந்தேதியில் 1,16,575 பயணிகளும், 7-ந்தேதி 1,01,430 பயணிகளும், 12-ந்தேதி 1,16,347 பயணிகளும், 13-ந்தேதியில் 1,19,888 பயணிகளும், 16-ந்தேதி 1,15,329 பயணிகளும், 30-ந்தேதி 1,14,123 பயணிகளும் பயணம் செய்து உள்ளனர்.

    ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 2.33 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்ஸி மற்றும் மெட்ரோ சீருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் சிறிய பேருந்து சேவைகளும் ஓ.எம்.ஆரில் உள்ள ஐ.டி. வழித்தடங்களில் டெம்போ வாகன வசதியும் பயணிகள் நலனுக்காக செய்யப்பட்டுள்ளன என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறி உள்ளது.

    Next Story
    ×