என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
Byமாலை மலர்30 Sep 2019 9:18 AM GMT (Updated: 30 Sep 2019 9:18 AM GMT)
சென்னை கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் ரூ.348 கோடி செலவில் கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
சென்னை கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் ரூ.348 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நாளை (1-ந்தேதி) காலை நடக்கிறது.
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.
அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் 3-ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு மையமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு மையம் மூலமாக தினமும் 45 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X