search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆரணியில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய், கள்ளக்காதலன் கைது

    ஆரணியில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆரணி:

    ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சோலையம்மாள் (வயது 35). இவர்களுக்கு ஒரு பெண், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமானார்.

    கடந்த 14-ந்தேதி சோலையம்மாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அக்ரப் பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு 15-ந்தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் 16-ந்தேதி மருத்துவமனையில் இருந்த சோலையம்மாள் தனது குழந்தையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் அக்கராப்பாளையம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ஆனந்த் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன சோலையம்மாள், பெண் குழந்தை மற்றும் கணவர் குமாரை தேடி வந்தனர்.

    மேலும் சேவூரில் உள்ள சோலையம்மாளின் மகள் லட்சுமி, தங்கை மலர் மற்றும் மாமனார், மாமியாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சோலையம்மாள் கடந்த 16-ந்தேதி குழந்தையை தூக்கி கொண்டு தனது கணவருடன் வீட்டிற்கு வந்தார்.

    மறுநாள் காலை சென்னையில் அவர்கள் செங்கல் வேலை செய்யும் இடத்திற்கு குழந்தையுடன் சென்று விட்டனர் என்று தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 18-ந்தேதி மாலை 6 மணிக்கு சோலையம்மாள் சேவூரில் உள்ள அவருடைய தங்கை மலரிடம் போனில் தொடர்பு கொண்டு குழந்தை இறந்து விட்டதாகவும், அதனால் சென்னையில் அடக்கம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில் சேவூர் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சோலையம்மாள் தனது கள்ளக்காதலன் பாபு (49) என்பவருடன் வந்தார். பெண் குழந்தையை நாங்கள் இருவரும் கொலை செய்து புதைத்து விட்டோம் என தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த வி.ஏ.ஓ. ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    எனது கணவரின் அண்ணன் பாபுவிற்கும் எனக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் எனக்கு கடந்த 14-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தையால் என் குடும்பத்தில் தகராறு ஏற்படும் என்று நினைத்து 16-ந்தேதி காலை மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் குழந்தையை தூக்கி கொண்டு நானும் பாபுவும் ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதிக்கு வந்தோம்.

    அங்கு துணியால் மூடி குழந்தையை கொலை செய்து நிலத்தில் புதைத்து விட்டு தப்பி சென்று விட்டோம்.

    போலீசார் எங்களை தேடுவதை தெரிந்து சேவூர் வி.ஏ.ஓ.விடம் நடந்த உண்மையை தெரிவித்து தப்பித்து விடலாம் என்று நினைத்தோம். எங்களை போலீசார் பிடித்து விட்டனர் என்றார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் பிணத்தை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்ப உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×