search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.28,944-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக உயர்ந்து வந்தது.

    கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு விலை சற்று குறைந்தது. தொடர்ந்து சரிந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,500 வரை குறைந்ததால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    அதன்பிறகு தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. கடந்த புதன்கிழமை ரூ.29 ஆயிரத்தை தாண்டிய நிலையில் மறுநாள் கணிசமாக குறைந்தது.

    எனினும் நேற்று தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. ஒரு கிராம் ரூ. 3,599-க்கும், ஒரு பவுன் ரூ.28,792 க்கும் விற்பனையானது. இன்றும் தங்கம் கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.3,618 ஆகவும், ஒரு பவுன் ரூ.152 உயர்ந்து ரூ.28,944-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலை இன்று 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.48.80-க்கும், ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 800-க்கும் விற்பனையாகிறது.
    Next Story
    ×