search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் வாகன சோதனை நடத்தியபோது எடுத்த படம்.
    X
    போலீசார் வாகன சோதனை நடத்தியபோது எடுத்த படம்.

    விக்கிரவாண்டி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

    விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. - தி.மு.க. நேரடியாக மோதுகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாவட்டம் முழுவதும் 39 பறக்கும் படைகளும், 39 நிலைக்கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். முக்கிய சாலைகளில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

    விக்கிரவாண்டி அடுத்த பனையூரில், திருக்கனூர், புதுச்சேரிசாலையில் இன்று அதிகாலை பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தாசில்தார் ஆனந்தன் தலைமையில் போலீசார் ஜோசப், முருகன், கதிர்வேல் ஆகியோர் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை நடத்தினர்.

    வாகனங்களில் பரிசு பொருட்கள் மற்றும் பணம் கடத்தப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தினர்.

    Next Story
    ×