search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    நாங்குநேரி இடைத்தேர்தல்- கனிமொழி, தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமனம்

    நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. சார்பில் தேர்தல் பணிபுரிவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்தல் பணி பொறுப்புக்குழு செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21-ந்தேதி நடைபெறுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. சார்பில் தேர்தல் பணிபுரிவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணியாற்ற தொகுதி தேர்தல் பொறுப்புக்குழு, தொகுதியில் உள்ள ஒன்றியம்- பேரூர் ஆகியவற்றுக்கு ஒன்றிய - பேரூர் தேர்தல் பணிக்குழு ஆகியவற்றுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நாங்குநேரி தொகுதி தி.மு.க. தேர்தல் பணி பொறுப்புக்குழு செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்படுகிறார். இதன் தலைவராக ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ., பொறுப்பாளராக ஆவுடையப்பன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

    களக்காடு ஒன்றிய தேர்தல் பணி பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

    நாங்குநேரி ஒன்றிய பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ஞானத்திரவியம் எம்.பி., கம்பம் ராமகிருஷ்ணன், கோ.தளபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பாளையங்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், பெரிய கருப்பன், சக்கரபாணி, செந்தில்குமார் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஏர்வாடி பேரூர் தி.மு.க. பணி பொறுப்பாளர்களாக மைதீன்கான் எம்.எல்.ஏ., காதர் பாட்சா, முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    களக்காடு பேரூர் பொறுப்பாளர்களாக லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட 3 பேரும் திருக்குறுங்குடி பேரூர் பொறுப்பாளராக மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாங்குநேரி பேரூர் தி.மு.க. தேர்தல் பணி பொறுப்பாளர்களாக எம்.முத்தையா, தங்க.தமிழ்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூலக்கரைப்பட்டி பேரூர் பொறுப்பாளர்களாக ஆலடி அருணா எம்.எல்.ஏ. உள்பட 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதவிர எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்பட 6 எம்.பி.க்கள், பி.டி.ஆர்.பி. தியாகராஜன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் தேர்தல் பணி ஆற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×