என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை
Byமாலை மலர்25 Sep 2019 8:31 AM GMT (Updated: 25 Sep 2019 8:31 AM GMT)
கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது38). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெரினா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை. தற்போது ஜெரினா 3 மாதம் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்றிரவு கணவன்- மனைவி இருவரும் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் ஜெரினாவின் வீட்டின் கதவு திறக்கவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது வீட்டில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.
உடனே அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய 2 பேரையும் கீழே இறக்கினர்.
அப்போதுஅந்த தம்பதியினர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அந்த கடிதத்தில் ஜெரினா எழுதி இருப்பதாவது நாங்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளோம்.
அந்த கடனை எங்களால் திருப்பி கட்ட முடியவில்லை. இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.
அதற்கு உறவினர்கள் யாராவது எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்து கடன்களை அடைக்குமாறு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெரினா எழுதி இருந்தார்.
பின்னர் தம்பதியினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது38). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெரினா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை. தற்போது ஜெரினா 3 மாதம் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்றிரவு கணவன்- மனைவி இருவரும் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் ஜெரினாவின் வீட்டின் கதவு திறக்கவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது வீட்டில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.
உடனே அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய 2 பேரையும் கீழே இறக்கினர்.
அப்போதுஅந்த தம்பதியினர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அந்த கடிதத்தில் ஜெரினா எழுதி இருப்பதாவது நாங்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளோம்.
அந்த கடனை எங்களால் திருப்பி கட்ட முடியவில்லை. இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.
அதற்கு உறவினர்கள் யாராவது எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்து கடன்களை அடைக்குமாறு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெரினா எழுதி இருந்தார்.
பின்னர் தம்பதியினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X