என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்வு
Byமாலை மலர்24 Sep 2019 5:18 AM GMT (Updated: 24 Sep 2019 5:18 AM GMT)
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று 19-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஒகேனக்கல்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் காவிரி ஆறு வரும் பாதைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் இன்று 19-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்று 48-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது. இன்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 7 ஆயிரத்து 599 கனஅடியாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் அதன் மொத்த கொள்ளளவான 124.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 808 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 6 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கபிணி அணையின் மொத்த நீர்மட்டமான 84 அடியில் 82.35 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 227 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் காவிரி ஆறு வரும் பாதைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் இன்று 19-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்று 48-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது. இன்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 7 ஆயிரத்து 599 கனஅடியாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் அதன் மொத்த கொள்ளளவான 124.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 808 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 6 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கபிணி அணையின் மொத்த நீர்மட்டமான 84 அடியில் 82.35 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 227 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X