என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விக்கிரவாண்டி தொகுதியில் விடியவிடிய போலீசார் வாகன சோதனை
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க 39 பறக்கும் படைகள் மற்றும் நிலைகண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பறக்கும் படையினர் நேற்று முதலே வாகன சோதனை நடத்த தொடங்கினர்.
விக்கிரவாண்டி சுங்கவரி மையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் மறித்து சோதனை மேற்கொண்டனர்.
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், மருது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை விடியவிடிய நடத்தப்பட்டது.
இதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்