என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் மயங்கி விழுந்து பலி
சேலம்:
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துகழக அலுவலகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பண பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், டாக்டர். சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் இருந்து வந்திருந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் மணி என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விழாவிற்கு வந்தவர்கள் அவரை சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் மணி இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்