search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நாமக்கல் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி

    நாமக்கல் அருகே எருமைபட்டியில் இன்று மதியம் கார்-லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள எருமைபட்டியில் இன்று மதியம் கார்-லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×