search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமான விமானபடை அதிகாரிகளின் மகன்கள்.
    X
    மாயமான விமானபடை அதிகாரிகளின் மகன்கள்.

    சூலூரில் பள்ளிக்கு சென்ற விமானப்படை அதிகாரிகள் மகன்கள் மாயம்

    பள்ளிக்கு சென்ற விமானப்படை அதிகாரிகளின் மகன்கள் மாயமான சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை சூலூர் விமானப்படை அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருபவர் விவேக் சிங் ரத்தோர். இவர் விமானப்படையில் அதிகாரியாக உள்ளார்.

    இவரது மகன் வருண் சிங் ரத்தோர் (வயது 13). இதே குடியிருப்பில் வசித்து வரும் பல்தேவ் தத்தானியா. இவரும் விமானப்படையில் அதிகாரியாக உள்ளார். இவரது மகன் கெட்டுல் தத்தானியா (14). இவர்கள் 2 பேரும் விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    நேற்று இவர்கள் வழக்கம் போல சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் 2 பேர் மட்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடினர். அப்போது இவர்கள் 2 பேரும் காலையில் இருந்தே பள்ளிக்கு வரவில்லை.

    காலை பள்ளிக்கு வரும்போது இவர்கள் மாயமானது தெரிய வந்தது. இதனையடுத்து விமானப்படை அதிகாரிகள் அக்கம் பக்கத்தில் தங்களது மகன்களை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் விமானப்படை அதிகாரிகள் மாயமான தங்களது மகன்களை கண்டு பிடித்து தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வருண்சிங் ரத்தோர், கெட்டுல் தத்தானியா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×