என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூரில் பள்ளிக்கு சென்ற விமானப்படை அதிகாரிகள் மகன்கள் மாயம்
Byமாலை மலர்20 Sep 2019 5:52 AM GMT (Updated: 20 Sep 2019 5:52 AM GMT)
பள்ளிக்கு சென்ற விமானப்படை அதிகாரிகளின் மகன்கள் மாயமான சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை சூலூர் விமானப்படை அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருபவர் விவேக் சிங் ரத்தோர். இவர் விமானப்படையில் அதிகாரியாக உள்ளார்.
இவரது மகன் வருண் சிங் ரத்தோர் (வயது 13). இதே குடியிருப்பில் வசித்து வரும் பல்தேவ் தத்தானியா. இவரும் விமானப்படையில் அதிகாரியாக உள்ளார். இவரது மகன் கெட்டுல் தத்தானியா (14). இவர்கள் 2 பேரும் விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று இவர்கள் வழக்கம் போல சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் 2 பேர் மட்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடினர். அப்போது இவர்கள் 2 பேரும் காலையில் இருந்தே பள்ளிக்கு வரவில்லை.
காலை பள்ளிக்கு வரும்போது இவர்கள் மாயமானது தெரிய வந்தது. இதனையடுத்து விமானப்படை அதிகாரிகள் அக்கம் பக்கத்தில் தங்களது மகன்களை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் விமானப்படை அதிகாரிகள் மாயமான தங்களது மகன்களை கண்டு பிடித்து தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வருண்சிங் ரத்தோர், கெட்டுல் தத்தானியா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
கோவை சூலூர் விமானப்படை அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருபவர் விவேக் சிங் ரத்தோர். இவர் விமானப்படையில் அதிகாரியாக உள்ளார்.
இவரது மகன் வருண் சிங் ரத்தோர் (வயது 13). இதே குடியிருப்பில் வசித்து வரும் பல்தேவ் தத்தானியா. இவரும் விமானப்படையில் அதிகாரியாக உள்ளார். இவரது மகன் கெட்டுல் தத்தானியா (14). இவர்கள் 2 பேரும் விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று இவர்கள் வழக்கம் போல சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் 2 பேர் மட்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடினர். அப்போது இவர்கள் 2 பேரும் காலையில் இருந்தே பள்ளிக்கு வரவில்லை.
காலை பள்ளிக்கு வரும்போது இவர்கள் மாயமானது தெரிய வந்தது. இதனையடுத்து விமானப்படை அதிகாரிகள் அக்கம் பக்கத்தில் தங்களது மகன்களை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் விமானப்படை அதிகாரிகள் மாயமான தங்களது மகன்களை கண்டு பிடித்து தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வருண்சிங் ரத்தோர், கெட்டுல் தத்தானியா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X