search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பெரம்பலூரில் தனியார் பஸ் மோதி மத்திய தணிக்கை அதிகாரி பலி

    பெரம்பலூரில் தனியார் பஸ் மோதி மத்திய தணிக்கை அதிகாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர:

    தூத்துக்குடி முனியசாமி புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் சென்னை டைரக்டர் சென்ட்ரல் ஆப் ஆடிட்டர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

    பெரம்பலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தணிக்கை பணி மேற்கொள்வதற்காக கடந்த 16-ந்தேதி வந்தார். பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து தணிக்கை பணியை மேற்கொண்டு வந்தார்.

    நேற்றிரவு ஆறுமுகம் சாப்பிடுவதற்காக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றார். மழை பெய்ததால் குடை பிடித்தப் படி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    பாலக்கரை வளைவு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஆறுமுகம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.

    இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று , ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் பசும்பலூரை சேர்ந்த ஜீவரத்தினத்தை (36) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×