என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரம்பலூரில் தனியார் பஸ் மோதி மத்திய தணிக்கை அதிகாரி பலி
பெரம்பலூர:
தூத்துக்குடி முனியசாமி புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் சென்னை டைரக்டர் சென்ட்ரல் ஆப் ஆடிட்டர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
பெரம்பலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தணிக்கை பணி மேற்கொள்வதற்காக கடந்த 16-ந்தேதி வந்தார். பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து தணிக்கை பணியை மேற்கொண்டு வந்தார்.
நேற்றிரவு ஆறுமுகம் சாப்பிடுவதற்காக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றார். மழை பெய்ததால் குடை பிடித்தப் படி நடந்து சென்று கொண்டிருந்தார்.
பாலக்கரை வளைவு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஆறுமுகம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று , ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் பசும்பலூரை சேர்ந்த ஜீவரத்தினத்தை (36) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்