என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமண ஆசை காட்டி நடன அழகி பாலியல் பலாத்காரம்- காதலன் உள்பட 2 பேர் கைது
மதுரை:
சென்னை அனகாபுத்தூர் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த ராஜா மகள் காயத்ரி (வயது26). இவர் மேடையில் பாட்டு பாடி நடனம் ஆடும் தொழில் செய்து வந்தார்.
இவருக்கும், மதுரை மாவட்டம் மேலூர் முனியாண்டி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி மீனா (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். மீனா மூலம் சக்திவேல் (29) என்பவர் காயத்ரிக்கு அறிமுகம் ஆனார்.
இந்த நிலையில் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காயத்ரி புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
என்னுடன் நெருங்கி பழகிய சக்திவேல் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் என்னிடம் இருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை பறித்துக் கொண்டார்.
தற்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதற்கு மீனாவும் உடந்தையாக இருந்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேல், மீனாவை கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்