search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் கும்பல் முதியவரை தாக்கி வழிப்பறி செய்த விடியோ காட்சி.
    X
    ஆரணியில் கும்பல் முதியவரை தாக்கி வழிப்பறி செய்த விடியோ காட்சி.

    ஆரணியில் முதியவரை தாக்கி வழிப்பறி செய்த கும்பல்

    ஆரணி டவுன் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு முதியவர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்த சம்பவம் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    ஆரணி:

    திருவண்ணாமலையை சேர்ந்த ஆறுமுகம் (வயது70) இவர் கடந்த 15-ந்தேதி ஆரணியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். இரவு 9.30 மணிக்கு ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலை ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமடக்கினர். அவரது அருகே மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் வந்து நின்றனர். இதனால் ஆறுமுகத்தால் தப்பி ஓடமுடியவில்லை. ஆறுமுகத்தை மடக்கிய 2 வாலிபர்கள் அவரை தாக்கி அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்தனர். இதனையடுத்து அவர்களது அருகே நின்ற 2 பேர் மற்றும் வழிப்பறி கும்பல் 3 பேர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். 

    இந்த சம்பவத்தை அந்த வழியாக வாகனங்களில் வந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை வாட்ஸ்-அப், பேஸ்-புக் உள்ளிட்ட சமூச வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

    இது ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரணி டவுன் போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவை வைத்து விசாரித்தபோது அந்த முதியவர் திருவண்ணாமலை சேர்ந்த ஆறுமுகம் என்று தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் ஆரணியை சேர்ந்த பிரபல ரவுடி கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் தான் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×