என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே காசோலை மோசடி வழக்கில் அரசு ஊழியர் கைது
Byமாலை மலர்18 Sep 2019 7:43 AM GMT (Updated: 18 Sep 2019 7:49 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே காசோலை மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த போக்குவரத்துக்கழக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கணேஷ்குமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரிடம் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் பெற்றார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்புராஜ் தனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். அதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காசோலை ஒன்றை கணேஷ்குமார் வழங்கினார். அதனை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இது குறித்து சுப்புராஜ் ஆண்டிப்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கணேஷ்குமாரை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி போலீசார் கணேஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கணேஷ்குமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரிடம் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் பெற்றார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்புராஜ் தனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். அதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காசோலை ஒன்றை கணேஷ்குமார் வழங்கினார். அதனை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இது குறித்து சுப்புராஜ் ஆண்டிப்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கணேஷ்குமாரை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி போலீசார் கணேஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X