என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கிய 10 கிலோ கஞ்சா பறிமுதல்- வியாபாரி கைது
ராயபுரம்:
சென்னை தண்டையார்பேட்டை மற்றும் புது வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வீடுகளில் கஞ்சா பொட்டலங்கள் தயார் செய்து குடிசை தொழிலாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்தநிலையில் தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கருப்புராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் புதுவண்ணாரப்பேட்டையில் குணசேகரன் என்பவர் கஞ்சாவை மொத்தமாகவும், பொட்டலங்களாகவும் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் புதுவண்ணாரப்பேட்டை தனபால் நகரில் கஞ்சா வாங்குவது போன்று நடித்தனர். பின்னர் குணசேகரன் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு சிறு சிறு பொட்டலங்காக கஞ்சா இருப்பதை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வியாபாரி குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தினர். ரெயில் மூலமாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறிய பொட்டலங்களாக தயாரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்