search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பாலக்காடு அருகே கடனை திருப்பி கேட்ட நண்பர் குத்திக்கொலை

    பாலக்காடு அருகே கடனை திருப்பி கேட்ட நண்பர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லடிக்கோடு மாச்சாங்கோடு பகுதியை சேர்ந்தவர் டெனிஸ் வர்க்கீஸ் (வயது 25). இவரது நண்பர் சாபீர் (19). நேற்று இருவரும் அந்த பகுதியில் மதுக்குடித்தனர். சிறிது நேரத்தில் டெனிஸ் வர்க்கீஸ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.

    இது குறித்து சாபீர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கல்லடிக்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிஜூ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயத்துடன் கிடந்த டெனிஸ் வர்க்கீசை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் பலத்த கத்திக்குத்து காயத்தால் இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது நண்பர் சாபீரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நண்பரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    மேலும் அவர் கூறும் போது, டெனிஸ் வர்க்கீசிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியிருந்தேன். அதனை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தேன். இருவரும் மது குடித்தபோது கடனை திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டெனிஸ் வர்க்கீசை குத்தினேன். பின்னர் கத்தியை வீசிவிட்டு தப்பித்துக்கொள்ள நானே போலீசுக்கு தகவல் கொடுத்தேன்.

    சந்கேதம் ஏற்படாத வகையில் ஆஸ்பத்திரி வரை வந்தேன் என்றார். இதனையடுத்து போலீசார் சாபீர் கைது செய்தனர்.

    Next Story
    ×