என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
Byமாலை மலர்17 Sep 2019 6:24 AM GMT (Updated: 17 Sep 2019 6:24 AM GMT)
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 29 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. இம்மாதம் 4-ந் தேதி வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்து 1 பவுன் ரூ. 30 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு படிப்படியாக குறைந்தது.
நேற்று காலை மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ. 42 உயர்ந்து ரூ.3,626-க்கும், 1 பவுன் ரூ. 29,008-க்கும் விற்பனையானது. மாலையில் சற்று குறைந்து 1 கிராம் ரூ.3,620-க்கும், பவுன் ரூ. 28, 960-க்கும் விற்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. 1 கிராம் ரூ.3,625-க்கு விற்பனையானது. இதனால் பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 29 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
இதே போல வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்தது. நேற்று கிராம் ரூ.50.30-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.50.40 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.50 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X