search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 29 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. இம்மாதம் 4-ந் தேதி வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்து 1 பவுன் ரூ. 30 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு படிப்படியாக குறைந்தது.

    நேற்று காலை மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ. 42 உயர்ந்து ரூ.3,626-க்கும், 1 பவுன் ரூ. 29,008-க்கும் விற்பனையானது. மாலையில் சற்று குறைந்து 1 கிராம் ரூ.3,620-க்கும், பவுன் ரூ. 28, 960-க்கும் விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. 1 கிராம் ரூ.3,625-க்கு விற்பனையானது. இதனால் பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 29 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    இதே போல வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்தது. நேற்று கிராம் ரூ.50.30-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.50.40 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.50 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

    Next Story
    ×