search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே தட்டில் பால் குடிக்கும் நாய், பூனை.
    X
    ஒரே தட்டில் பால் குடிக்கும் நாய், பூனை.

    வாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை

    வாழப்பாடி அருகே எஜமான் வருகையை எதிர்பார்த்து காத்திருந்து ஒரே தட்டில் ஒற்றுமையாய் நாய், பூனை பால் குடிக்கும் வினோத சம்பவம் நடந்துள்ளது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 40). இவர் வாழப்பாடி அருகிலுள்ள வைத்திய கவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில், பப்லு, செவலை, என்ற பெயரில் 2 நாய்களையும், சுஷ்மா என்ற பூனையையும், நாட்டுக் கோழிகளையும் வளர்த்து வருகிறார்.

    தினந்தோறும் காலை நேரத்தில் தனது தோட்டத்திற்கு செல்லும் இவர், தான் வளர்த்துவரும் நாய், பூனை, கோழிகளுக்கு ஒரே தட்டில் பாலை ஊற்றி வைக்கிறார். எஜமான் வருகையை எதிர்பார்த்து வாசலிலேயே காத்து நிற்கும் நாய்கள், பூனை மற்றும் நாட்டுக்கோழிகள் ஒரே தட்டில் ஊற்றி வைக்கும் பாலை சண்டை எதுவும் போடாமல் அமைதியாக குடிக்கும் நிகழ்வு தினந்தோறும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த காட்சியை சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்கள் வியப்பாக பார்த்துச் செல்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயி பழனிசாமி கூறும்போது, தினந்தோறும் கறவை மாடுகள் கறக்கும் பாலை, கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு சென்று ஊற்றி விட்டு, கால்நடைகளுக்காக கொஞ்சம் பாலை கொண்டு வந்து ஒரு தட்டில் ஊற்றி வைப்பேன். பொதுவாக நாய், பூனை எதிரிகளாகத் தான் இருக்கும். ஆனால் நான் வளர்க்கும் நாய்கள், பூனை, கோழிகள் சண்டை போட்டுக்கொள்ளாமல்,  ஒற்றுமையாக ஒரே தட்டில் பாலை குடித்து வருகின்றன. எனது வருகைக்காக காத்திருந்து வீட்டு விலங்குகள்,  ஒரே தட்டில்  பால் குடிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
    Next Story
    ×