search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    நாட்டின் ஒரே மொழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

    நமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

    பரமக்குடி:

    அமைச்சர் செல்லூர் ராஜூ பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் எப்போதும் அண்ணா வகுத்த இரு மொழிக் கொள்கையில் தான் செல்கிறது. தமிழக முதல்வர்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரும் அதையே கடைப்பிடித்தனர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணா வகுத்து கொடுத்த இருமொழி கொள்கையைத் தான் கடைபிடித்து வருகிறார்.

    ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். நமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×