என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மு.க.ஸ்டாலின் காணும் கனவு என்றும் பலிக்காது- அன்புமணி ராமதாஸ் எம்.பி.
Byமாலை மலர்14 Sep 2019 11:32 AM GMT (Updated: 14 Sep 2019 11:32 AM GMT)
மு.க.ஸ்டாலின் காணும் கனவு என்றும் பலிக்காது என்று தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
தர்மபுரி:
தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று இரவு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் 80-வது முத்துவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாட்டாளி இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூட்டத்தில் பேசியதாவது:-
மனசாட்சி இல்லாத எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாய கடன்கள் ரத்து, கல்விக் கடன் ரத்து, வங்கிக் கடன் ரத்து என்று பொய் கூறினார். ஸ்டாலினால் சட்டையை மட்டும் தான்கிழிக்க முடியும்.
18 நாட்களில் நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடுவதாக ஸ்டாலின் கூறினார். ஆனால் அவர் காணும் கனவு என்றும் பலிக்காது. 50 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு என்ன செய்தது. இனி வந்தும் என்ன செய்யபோகிறார்.
காவிரி பிரச்சனைக்கு காரணம் தி.மு.க. தான். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் கொண்டு வந்தது திமுக தான். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிரிழப்புக்கு முக்கிய காரணம் மு.க.ஸ்டாலின், தற்போது அவர்கள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று இரவு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் 80-வது முத்துவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாட்டாளி இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூட்டத்தில் பேசியதாவது:-
மனசாட்சி இல்லாத எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாய கடன்கள் ரத்து, கல்விக் கடன் ரத்து, வங்கிக் கடன் ரத்து என்று பொய் கூறினார். ஸ்டாலினால் சட்டையை மட்டும் தான்கிழிக்க முடியும்.
18 நாட்களில் நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடுவதாக ஸ்டாலின் கூறினார். ஆனால் அவர் காணும் கனவு என்றும் பலிக்காது. 50 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு என்ன செய்தது. இனி வந்தும் என்ன செய்யபோகிறார்.
காவிரி பிரச்சனைக்கு காரணம் தி.மு.க. தான். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் கொண்டு வந்தது திமுக தான். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிரிழப்புக்கு முக்கிய காரணம் மு.க.ஸ்டாலின், தற்போது அவர்கள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X