search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    முன்னாள் அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கு- 5 பேருக்கு ஆயுள் தண்டனை

    முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    பூந்தமல்லி:

    அம்பத்தூர் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் குரு. அ.தி.மு.க. பிரமுகரான இவர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். கடந்த 2015-ம் ஆண்டு வீட்டின் அருகே குரு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொரட்டூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், பிரவிண்குமார், ராஜ்குமார், மற்றொரு பிரவிண்குமார், ஸ்ரீதர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண்-3ல் நடந்து வந்தது.

    இன்று வழக்கை நீதிபதி அம்பிகா விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுரேஷ்குமார் உள்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிப்பதாக கூறினார்.
    Next Story
    ×