search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்

    பெரியார் சிலைக்கு 17-ந்தேதி எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். மரியாதை

    தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளான 17-ந்தேதி அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளான 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெரு மக்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்களும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகளும் மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×