என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம் முழுவதும் குளங்கள் தூர்வாரப்படும்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி
Byமாலை மலர்9 Sep 2019 3:05 PM GMT (Updated: 9 Sep 2019 3:05 PM GMT)
தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்க தி.மு.க. இளைஞர் அணி மூலம் குளங்கள் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவாரூர்:
தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்களில் நீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி நாரணமங்கலத்தில் உள்ள திருவாசல்குளம் தூர்வாரும் பணி தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று காலை நடைபெற்றது. இந்த தூர்வாரும் பணியை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் எம்.பி விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கர், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா, நகரச்செயலாளர் பிரகாஷ், கூடூர் கிளைச்செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் ஏரி குளங்களை தூர்வாரும் பணியில் தங்களையும் ஈடுபடுத்திக்கொள்வது என தி.மு.க. இளைஞர் அணி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மதுரையில் உள்ள ஒரு கண்மாய் குளம் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். அதுபோல் இன்றைக்கு திருவாரூரில் உள்ள இந்த குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்திருக்கிறோம். இதனை தொடர்ந்து திருக்குவளையில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொள்ள உள்ளோம்.
இதுபோல் தமிழகம் முழுவதும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் குளம் தூர் வாருவது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பணிகளை தி.மு.க. இளைஞர் அணியினர் சிறப்பாக செய்து முடிப்பார்கள். தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணியை வருகிற செப்டம்பர் 14-ந் தேதி முதல் தொடங்க உள்ளோம். தமிழகம் முழுவதும் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்குடன் எங்களுடைய பணி தொடங்கப்படுகிறது. இந்த இலக்கை மிஞ்சுகின்ற வகையில் உறுப்பினர் சேர்க்கை இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X