என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எங்களை வீழ்த்தி வெற்றி பெற்றார் - மு.க. ஸ்டாலினுக்கு பா.ஜனதா பாராட்டு
Byமாலை மலர்5 Sep 2019 9:51 AM GMT (Updated: 5 Sep 2019 9:51 AM GMT)
கலைஞருக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றி பெற்ற தளபதியாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று பாஜக முன்னாள் எம்.பி. சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்மட்ட குழு உறுப்பினருமான வெள்ளகோவில் சாமிநாதன் இல்ல திருமண விழா திருப்பூர்-காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். விழாவில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர், கலைஞருக்கு பிறகு எங்கள் எல்லோரையும் வீழ்த்தி வெற்றி பெற்ற தளபதியாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
ஸ்டாலின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தி உள்ளது என பேசினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து இருந்தது. தற்போது வரை கூட்டணி நீடிக்கிறது.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்மட்ட குழு உறுப்பினருமான வெள்ளகோவில் சாமிநாதன் இல்ல திருமண விழா திருப்பூர்-காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். விழாவில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய கயிறு வாரிய குழு தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யுமான சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர், கலைஞருக்கு பிறகு எங்கள் எல்லோரையும் வீழ்த்தி வெற்றி பெற்ற தளபதியாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
ஸ்டாலின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தி உள்ளது என பேசினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து இருந்தது. தற்போது வரை கூட்டணி நீடிக்கிறது.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X