search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய மினிலாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
    X
    விபத்தில் சிக்கிய மினிலாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்து- தீயணைப்பு நிலைய அதிகாரி மகளுடன் பலி

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி, மகளுடன் உடல் நசுங்கி பலியானார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.3-

    கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி, மகளுடன் உடல் நசுங்கி பலியானார்.

    நெல்லை மாவட்டம், கீழக்கடையத்தைச் சேர்ந்த வர் மில்டன் ஜெயக்குமார் (வயது 59). ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலைய அதிகாரி. இவரது மகள் ரெனிலா ரோஸ் (26). திருமணமானவர்.

    மில்டன் ஜெயக்குமார் நேற்று தனது மகளுடன் மதுரைக்கு வேலை வி‌ஷயமாக காரில் வந்தார். பின்னர் நள்ளிரவில் இரு வரும் ஊருக்கு புறப்பட்ட னர்.

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மதுரை-செங்கோட்டை ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது.

    அங்குள்ள அரசு தோட்டக்கலை பண்ணை அருகே சென்றபோது கேரளாவில் இருந்து மதுரைக்கு வந்து கொண் டிருந்த மினிலாரி எதிர் பாராத விதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார்-மினி லாரியின் முன் பகுதி பலத்த சேதமடைந்தன. கார், லாரிக்குள் சொருகியது.

    இந்த விபத்தில் மில்டன் ஜெயக்குமார், ரெனிலா ரோஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மினிலாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த சிராஜுதீன் (43) லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்த தந்தை, மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். * * * விபத்தில் உடல் நசுங்கி காரில் பிணமாக கிடக்கும் மில்டன் ஜெயக்குமார். * * * விபத்தில் சிக்கிய மினிலாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

    Next Story
    ×