என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர்- காதலி மரணம்
Byமாலை மலர்2 Sep 2019 10:55 AM GMT (Updated: 2 Sep 2019 10:55 AM GMT)
கர்நாடகாவை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவத்தில் காதலி பரிதாபமாக உயிரிழந்தார். காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி:
கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த கோப்புலு கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. இவரது மனைவி பிந்து (வயது 20). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் பிந்துவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜீன் (28) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிந்துவின் வீட்டினர், பிந்துவை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த இருவரும் வீட்டை விட்டு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு செல்வதற்காக பஸ்சில் வந்துள்ளனர். பஸ் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரிமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பயணிகள் சாப்பிட நிறுத்தியுள்ளனர்.
அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தாங்கள் வாங்கி வந்திருந்த விஷத்தை இருவரும் குடித்து மயங்கி விழுந்துள்ளனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்த்தினர் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிந்து பரிதாபமாக இறந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மல்லிகார்ஜீனனை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குருபரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அர்சுனன் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X