search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

    பா.ஜ.க. அலுவலகத்துக்கு நேரில் சென்ற சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் நிலவுகிற பொருளாதார மந்தநிலை குறித்து விளக்கம் கேட்பதற்காக சேலத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்துக்கு நேரில் சென்ற சமூக ஆர்வலர் பியூஸ் மானுசை கடுமையாக தாக்கியதோடு, செருப்பு மாலை அணிவித்து பா.ஜனதாவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன்மூலம் தமிழக பா.ஜனதாவினருக்கு சகிப்புத் தன்மை இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் செயல்பட்டவர் மீது இத்தகைய தாக்குதலை பா.ஜனதாவினர் கட்ட விழித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    Next Story
    ×