என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயணிகள் கூட்டத்தை சமாளிக்க 2½ நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில்
Byமாலை மலர்28 Aug 2019 6:27 AM GMT (Updated: 28 Aug 2019 6:27 AM GMT)
பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் 2½ நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. தற்போது 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் 2½ நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனால் மெட்ரோ ரெயிலில் தினமும் பயணம் செய்வோர் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மெட்ரோ நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயிலில் தற்போது தினமும் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அவசர நேரங்களில் (பீக் அவர்ஸ்) காலை 8 மணி-10 மணி, மாலை 5 மணி- 8 மணி வரை 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண நேரங்களில் 25 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
பயணிகள் வசதிக்காகவும் கூட்டத்தை அதிகரிக்க 2½ நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. தற்போது 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் 2½ நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனால் மெட்ரோ ரெயிலில் தினமும் பயணம் செய்வோர் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மெட்ரோ நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயிலில் தற்போது தினமும் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அவசர நேரங்களில் (பீக் அவர்ஸ்) காலை 8 மணி-10 மணி, மாலை 5 மணி- 8 மணி வரை 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண நேரங்களில் 25 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
பயணிகள் வசதிக்காகவும் கூட்டத்தை அதிகரிக்க 2½ நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X