search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சேதமடைந்த கார்.
    X
    விபத்தில் சேதமடைந்த கார்.

    விழுப்புரத்தில் கார் மீது லாரி மோதல்- பாதிரியார் பலி

    விழுப்புரத்தில் கன்னியாகுமரி சென்ற கார் மீது லாரிய மோதிய விபத்தில் பாதிரியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
    விழுப்புரம்:

    கன்னியாகுமரி அருகே உள்ள குமாரபுரம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜாசிங் (வயது62). பாதிரியார். இவர் தனது மனைவி எப்சியா (60), மகன் ஜானத் (32), மருமகன் போவாஸ் (32) ஆகியோருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்றார். இந்த காரை போவாஸ் ஓட்டினார்.

    விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் காரை நிறுத்தி உணவு சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் காரில் புறப்பட்டனர். அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென்று காரின் பின்பகுதியில் மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.

    இந்த விபத்தில் பாதிரியார் ராஜாசிங் சம்பவ இடத்தில் பலியானார். காரில் இருந்த எப்சியா, ஜானத், போவாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னையை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் சேகர் என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×