என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயண அட்டை மூலம் வாகன கட்டணம் செலுத்தலாம்
Byமாலை மலர்27 Aug 2019 6:53 AM GMT (Updated: 27 Aug 2019 6:53 AM GMT)
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்தும் முறை வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதற்காக பயண அட்டை மூலம் வாகனம் நிறுத்தும் கட்டணங்களை செலுத்தும் ஏற்பாட்டை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்திருந்தது.
இது தற்போது சோதனை அடிப்படையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த முறை கடந்த 1-ந்தேதி முதலே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் இந்த புதிய முறைக்கு மாறுவதற்கு பயணிகள் கால அவகாசம் கேட்டனர். அதையேற்று 1 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது 26 நாள் கடந்து விட்ட நிலையில் இன்னும் 5 நாளில் புதிய முறை அமலாகிறது.
இந்த புதிய முறைப்படி சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
மெட்ரோ ரெயில் பயண அட்டை இல்லாத பயணிகள், பொது மக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனத்தை நிறுத்த அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவோ, மெட்ரோ ரெயில் பயண அட்டையை வாங்க வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே பார்க்கிங் கட்டணத்தை செலுத்த முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதற்காக பயண அட்டை மூலம் வாகனம் நிறுத்தும் கட்டணங்களை செலுத்தும் ஏற்பாட்டை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்திருந்தது.
இது தற்போது சோதனை அடிப்படையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த முறை கடந்த 1-ந்தேதி முதலே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் இந்த புதிய முறைக்கு மாறுவதற்கு பயணிகள் கால அவகாசம் கேட்டனர். அதையேற்று 1 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது 26 நாள் கடந்து விட்ட நிலையில் இன்னும் 5 நாளில் புதிய முறை அமலாகிறது.
இந்த புதிய முறைப்படி சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
மெட்ரோ ரெயில் பயண அட்டை இல்லாத பயணிகள், பொது மக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனத்தை நிறுத்த அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவோ, மெட்ரோ ரெயில் பயண அட்டையை வாங்க வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே பார்க்கிங் கட்டணத்தை செலுத்த முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X