என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வடக்கு காமராஜர் காலனியை சேர்ந்த பன்னீர் மகன் ராஜ்குமார் (வயது 20). இவர் டோல்கேட்டில் உள்ள ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். அவருடன் மண்ணச்சநல்லூர் புவனேஸ்வரி நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கார்த்திக்ராஜா (17) என்பவரும் பணியாற்றி வந்தார்.
நேற்றிரவு பணி முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றனர். பிச்சாண்டார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே செல்லும் போது சிறுகாம்பூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் டிரைவர், பேருந்து நிறுத்தத்தில் நின்ற மற்றொரு பஸ்சை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இதில் ராஜ்குமார், கார்த்திக்ராஜா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனே இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது ராஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கார்த்திக் ராஜாவை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரும் இறந்தார். இந்த விபத்து குறித்து நெ.1 டோல் கேட் போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் தொட்டியத்தை சேர்ந்த ஜோதி ராஜனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்