search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி உடலை மீட்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    மாணவி உடலை மீட்கப்பட்ட போது எடுத்த படம்.

    நம்பியூர் அருகே வாய்க்காலில் குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வாய்க்காலில் குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மொடவாண்டி பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி விவசாயி.

    இவருக்கு 3 மகள்கள். 2-வது மகள் கோகுல சிவரஞ்சனி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    மாணவி கோகுல சிவரஞ்சனி தன்னை பெற்றோர் மற்ற மகள்களை போல் பார்க்கவில்லையே என்ற வருத்தம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சைக்கிளுடன் பள்ளிக்கு போன கோகுல சிவரஞ்சனி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அலிங்கியம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் மாணவி கோகுல சிவரஞ்சனி உடல் மிதந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகே மாணவி வந்த சைக்கிள் இருந்தது. அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கடத்தூர் போலீசார் விரைந்து வந்து அக்கம்-பக்கத்தினர் உதவியுடன் மாணவி உடலை மீட்டனர். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது.

    போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×