search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.
    X
    செஞ்சியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

    பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி- செஞ்சியில் போலீசார் வாகன சோதனை

    பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து செஞ்சி கோட்டை, செஞ்சி பாலம், மேல்மலையனூர் கோவில் செல்லும் வழி ஆகிய பகுதியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    செஞ்சி:

    பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களான விமான நிலையம், ரெயில் நிலையம், கோவில் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணித்தபடி உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் உத்தரவின்பேரில் செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    செஞ்சி கோட்டை, செஞ்சி பாலம், மேல்மலையனூர் கோவில் செல்லும் வழி ஆகிய பகுதியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும் செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×