search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை ரெயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்
    X
    கோவை ரெயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்

    தமிழகம் - கேரளாவில் 5 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

    தமிழகம், கேரளாவில் 5 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதையடுத்து அப்பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    கோவை:

    தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊருடுவலை தொடர்ந்து மாநில முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதை போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் உறுதி செய்தார். மேலும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளது என்றார். இதற்கிடையே பயங்கரவாதிகள் எங்கெங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பயணிகளின் உடமைகள் சோதனையிடப்பட்டது

    பயங்கரவாதிகள் தமிழகம், கேரளாவில் முக்கிய இடங்களை குறி வைத்துள்ளனர். அதன்படி வேளாங்கண்ணி தேவாலயம், ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், கோவை சூலூர் விமான படை தளம், சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மத ரீதியான பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் போடப்பட்டு அதன் வழியே அனைவரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.


    Next Story
    ×