search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபசாரம்
    X
    விபசாரம்

    சூலூரில் மசாஜ் சென்டரில் விபசாரம்- 2 அழகிகள் மீட்பு

    சூலூரில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சூலூர்:

    சூலூர் ரங்கநாதபுரம் செங்காளியப்பன் நகரைச் சேர்ந்தவர் பாரதிராஜன்(30). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர் சூலூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விபசார புரோக்கர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த , சுரேஷ் (29), சோமனூரை சேர்ந்த சங்கீதா (34) ஆகியோர் தங்களிடம் அழகிகள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறினர். 

    பின்னர் பாரதி ராஜனை எஸ்.எல்.வி. நகரில் உள்ள மசாஜ் சென்டருக்கு அழைத்து சென்றனர். அங்கு 2 அழகிகள் இருந்தனர். இதனை தொடர்ந்து அவர் தான் பணம் எடுத்துவருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். 

    உடடினயாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம் தலைமையிலான போலீசார் எஸ்.எல்.வி. நகரில் மசாஜ் சென்டருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அங்கு மசாஜ் செய்வதாக கூறி பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அங்கு இருந்த 2 அழகிகளை மீட்டனர். மசாஜ் சென்டர் பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த புரோக்கர்கள் சுரேஷ், சங்கீதா ஆகியோரை கைது செய்தனர். 

    மேலும் தலைமறைவாக உள்ள புரோக்கர்கள் சிக்கந்தர் பாதுசா, பாபுகணேஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×