search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தாராபுரம் அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை- வாலிபர் கைது

    தாராபுரம் அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகையை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் வசித்து வருபவர் பரமசிவம். இவர் தனது வீடு அருகே திருமண மண்டபம் வைத்துள்ளார். இவரது மனைவி பங்காரு லட்சுமி. மகள் கார்த்திகா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 18-ந் தேதி பரமசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபயிற்சி சென்றுவிட்டனர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வெள்ளைச்சாமி என்பவரும் மாயமாகி இருந்தார். எனவே அவர் நகை-பணத்தை திருடி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பரமசிவம் வீட்டில் வேலை பார்த்து வந்த வெள்ளைச்சாமி நேற்று பல்லடம் பகுதியில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில் 50 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 40 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×