என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்
Byமாலை மலர்20 Aug 2019 3:33 AM GMT (Updated: 20 Aug 2019 3:33 AM GMT)
கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு படைப்புத் திறன் சார்ந்த கலைத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
மதுரை:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த பட்டறையின் 2-ம் நாள் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார். அவர் தமிழ் வாழ்க்கைப்பணி என்ற தலைப்பில் பேசியதாவது:-
இணையதளம் மூலம் தகவல்களை பரிமாற தொடங்கிய பிறகு, தாய்மொழி பயன்பாடு குறைந்து வருகிறது. மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 2001-11-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் தமிழ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அதேவேளையில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 322 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் அந்த கணக்கெடுப்பு கூறுகிறது. ஒரு மொழியின் வளர்ச்சியானது, அந்த மொழியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை பொறுத்தது.
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு படைப்புத் திறன் சார்ந்த கலைத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கான திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம். எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் முழுமையான அறிவை வளர்த்தல், வேலைவாய்ப்புக்கான பண்பு, திறனை வளர்த்துக் கொள்வது, பழக்க வழக்கங்கள் இவை தான் வாழ்க்கைப்பணியைப் பெறுவதற்கு அடிப்படை ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கருணாஸ் எம்.எல்.ஏ., பேராசியர் கு.ஞானசம்பந்தம், பாடலாசிரியர் முத்துலிங்கம், அன்பு செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த பட்டறையின் 2-ம் நாள் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார். அவர் தமிழ் வாழ்க்கைப்பணி என்ற தலைப்பில் பேசியதாவது:-
இணையதளம் மூலம் தகவல்களை பரிமாற தொடங்கிய பிறகு, தாய்மொழி பயன்பாடு குறைந்து வருகிறது. மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 2001-11-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் தமிழ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அதேவேளையில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 322 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் அந்த கணக்கெடுப்பு கூறுகிறது. ஒரு மொழியின் வளர்ச்சியானது, அந்த மொழியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை பொறுத்தது.
உலகஅளவில் 3 ஆயிரம் மொழிகள் அழியும் நிலையில் இருப்பதாக யுனெஸ்கோ ஆய்வில் தெரியவந்துள்ளது. மொழியின் வளர்ச்சிக்கு புதிய சொற்கள் அவசியம். உலக அளவில் எந்த மொழிச்சொற்களாக இருந்தாலும், அதற்கு இணையான ஆங்கிலச்சொல் உடனடியாக அறிமுகமாகிறது. தமிழிலும் புதிய சொற்களை உருவாக்கும் முயற்சியாக ‘சொற்குவைத்திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கருணாஸ் எம்.எல்.ஏ., பேராசியர் கு.ஞானசம்பந்தம், பாடலாசிரியர் முத்துலிங்கம், அன்பு செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X