என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி மாவட்டத்தில் விரைவில் சட்டக்கல்லூரி- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
தேனி:
தேனி மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கான இருசக்கர வாகனம் மானிய விலையில் வழங்கும் விதமாக அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தின் கீழ் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட 702 மகளிருக்கு ரூபாய் 1 கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்களையும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக 42 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.1 கோடியே 81 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவிகளையும், 177 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
இதில் பயனாளிகள் கலந்து கொண்டு இருசக்கர வாகன உதவியையும் நலத்திட்ட உதவிகளையும் பெற்று கொண்டனர். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், வீடில்லா ஏழைகளுக்கு கான்கிரிட் வீடுகள் அமைத்து தரப்படும். தேனி மாவட்டத்தில் விரைவில் அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படும். தேனி மாவட்டம் கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழும். இரு சக்கர வாகனம் வாங்கும் மகளிர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்